தஞ்சாவூர் கோழி ஆப்பம்
தஞ்சாவூர் கோழி ஆப்பம்
என்னென்ன தேவை?
- மைதா - இரண்டு கப்
- முட்டை - இரண்டு
- தேங்காய் பால் - ஒரு டம்ளர்
- சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
- வெங்காயம் - இரண்டு
- பச்சை மிளகாய் - மூன்று
- உப்பு - ஒரு தேக்கரன்டி
- இட்லி சோடா - ஒரு பின்ச்
எப்படிச் செய்வது?
முட்டையை நுரை பொங்க அடித்து வைக்க வேண்டும்.
உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், சோம்பு, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
மைதா மாவில் அரைத்ததை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
பிறகு அடித்து வைத்துள்ள முட்டை, தேங்காய் பால், இட்லி சோடா சேர்த்து கலக்கவும்.
தோசை மாவு பதத்திற்கு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
இப்போது தோசைகளாக வார்க்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள கோழி குருமா நல்லா இருக்கும், வெஜ் குருமா, சர்க்கரை, மிளகாய் பொடியும் நல்ல இருக்கும்
Comments
Post a Comment